தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன்...
[கணவர் தலித் சாம்ராட் சங்கருக்காக...
கெளசல்யா!]
கெளசல்யா
தோழி சுபாஷிணிக்கு,
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த , கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை(10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னைத் தங்கள் மகளாகப் பார்த்துக் கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க இன்று வரை இருக்கிறார்கள்! எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுக்க வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
அன்புடன்,
கவினின் கௌரவக் கொலை - கௌசல்யாவின் மனமார்ந்த வேண்டுகோள்!
ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர...
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி...
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் நோய்சூடு
தப்பாட்டம் சாதி விரட்டு! .
ஐடி ஊழியர் கவின் தனது காதலிக்காக இறந்தது சமூகத்தையே உலுக்கியது.
காதல் கொலை சம்பவத்தை நினைத்துப் பார்த்ததாகச் சொன்ன கௌசல்யா, கவினின் காதலி சுபாஷினியிடம் ஒரு மனமார்ந்த வேண்டுகோள் விடுத்தார்.
🗣️ "நீங்கள் கவினுக்கு துணை நிற்க வேண்டும்"
இந்த உணர்ச்சிபூர்வமான பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
காற்று வரும்போகும்; கானல்நீர் எந்நாளும்...
ஊற்றுநீர் ஆகாது; உணர்விணமே! சூத்திரா!
நேற்றுவரை நானும் நினை'சாதி' சூத்ரச்சி!
தேற்றிட்டான் என்னை திகட்டா தலித்;அவனை...
போற்றிநான் இன்று புகலும்தாய் காதலன்தான்!
தூற்றுப்பார்பான் சாதிஒழி நீஆண்!
ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்...
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி...
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் நோய்சூடு
தப்பாட்டம் சாதி விரட்டு! .
சிங்கப்பெண்ணே!
https://x.com/WillsindiasM/status/1951567746002780614?t=Fz3Wos8uV4RDX8vDL-Cf7A&s=0
Comments
Post a Comment