கருத்தரிக்கும போதே காணல்நீர் இறைவன் எழுதிட்டதே தலைஎழுத்தாம்!

கார்த்திக் பெரியார்

23ம.நே · 

கீழ் ஜாதி அதான் அனுமதி இல்லை, இது தான் சனாதனம்


பார்ப்பனரின் குலசாமியான ராமனுக்கு அயோத்தியில் பல ஆயிரம் கோடி பணச் செலவில் கோயில் கட்டுவதனால் தமிழர்களின் பெருமை ஒன்றுமில்லை. தமிழா, விழித்துக்கொள்! சற்று அயர்ந்து போன நேரத்திலேதான் பார்ப்பனரின் புத்தாண்டான சமஸ்கிருத ஆண்டுப் பிறப்பை, தமிழர் புத்தாண்டென திரித்து, நம்மைக் கொண்டாடச் செய்தனர். இப்போது நாம் ஏமாற்றமடைந்தால், பார்ப்பனர்தம் குலசாமியான ராமனை, தமிழர்களின் குலசாமியாக புனைந்து விடுவார்கள்.
விழித்துக் கொள் தமிழா! ஏமாற்றுங் கூட்டம் அயோத்தியிலிருந்துகிளம்பிவிட்டது. ஏற்கனவே, பார்ப்பனரின் சமூக அடிமையாகிவிட்ட நம் துர்நிலையை மாற்றியமைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் நம்மை அரசியல் அடிமையாக்க ஒரு கூட்டம் அதீத முயற்சியில் இறங்கியுள்ளது.
தமது துணைவியார் சீதை கற்புடையவளா? இல்லையா? அது கூட தனது தெய்வீக சக்தி ? யின் மூலம் அறிந்து கொள்ளும் திறனற்ற, கற்புச் சுத்தத் தன்மையைக் கணக்கிடும் தீயை அளவுகோலாக நம்புகிறவன் சராசரி மனிதனாக இருக்க கூட தகுதியில்லாத மூடன், பார்ப்பனருக்கு பாதுகாப்பாக இருந்த ஒற்றைக் காரணத்திற்காக கடவுளாகப் புனையப் பெற்ற ராமனை தமிழர் நாம், குலசாமியாக ஏற்பதென்பது நமது அறிவார்ந்த இனத்துக்கென்னபதை உணர்ந்து மூடர் கூட்டத்தின் முயற்சியை முனைந்து முறியடிப்போம்.

இங்க ராம பக்தர்களால் சீதை கற்பழிக்க பட்டு இருப்பாள், ஆனால் ராமனுக்கு கோவில் கட்டுவான்

உங்களால் நாங்கள் நிமிர்ந்து படித்து வாழ்கிறோம் உரிமையோடு 

சிவனது சிரசுள் வீற்றிருப்ப தாய்ஓதுகதை! 
பிறைமேல் அகிலன் பிழைஆமோ ? மிதித்து 
பூமிக்குப் புறப்பட்ட அறிவியலை போற்று!
 
சிவன் தெய்வ மேஎன்றால் திருந்து; 
அவன்அணி ஓதுபிறை புனிதம்மேல் 
மனித(ன்) கால்கள் நடக்க முடியுமோ? 

சாமி குத்தம் (அவமதிப்பு) என்று 
ஆகதோ? நிலவுமீது கால்பதித்து 
இறங்கி நடந்திட்ட தேமனுடம்!.


இதை இதை, இவன் இவன்
செய்திடும் படிக்கு
ஒவ்வொருவரும் தலையலும்
கருத்தரிக்கும பொழுதே...
காணல்நீர் (படைத்தவன்)
எழுதிட்ட எழுத்தே... தலைஎழுத்து
என்றோதி மானுடத்தை
நம்பசெய்து சிதைத்தான்- இந்திய
முதலாம் அன்னியன்! (அவ்வாறு)
கருத்தரித்தபோதே அவரவர் தலைமேல்
இறைவன் எழுதிட்டதாய் ௐதுவது
கற்பனை அல்ல என்றால்...
பெரியவராய் ஆனபின் செய்திட்டதை
எல்லாம்... ஈ.வெ.ரா பெரியாரை
படைத்திட்ட அந்தகணமே
அறிந்திருப்பானே இறைவன்!
தன்னை (தெய்வத்தை)செருப்பால்
அடிக்கவும், உடைக்கவும்,
நெருப்பு எரியும்; ஈ.வெ.ரா
தலையில் எழுதியிருப்பானோ? செப்பும்
அனைத்தும் படைத்திட்ட இறைவன்!
ஈ.வெ.ரா. வளர்ந்து பெரியார் எனஆனபின்
தன்னை செருப்பால் அடிப்பானே;
தன் சிலையை உடைப்பானே;
நெருப்பு எரிவானே-என்று
படைப்புக்கு முன்னதாகவே
தெரிந்திட்ட கடவுள் – அவரை
பிறக்க வைத்தானே ஏன்உலகில்?
ஈ.வெ.ரா. பெரியார், கீழே போட்டு
உடைத்திட... நொருங்கிட்ட நிலையில்
மஞ்சிற்பம் தெய்வமோ?
உடைவுற்று இறைவன்
இழிவுப்படும் நிலைமையில்
மானுடத்தை படைத்திருப்பானோ?
தெய்வ நம்பிக்கை முற்றும் போலி!
தெளிவுறு உடனேஎன் அறிவே!




Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...