உலகின் அனைத்து மொழிகளுக்கும் தாய்... தமிழ்!

  Ramu Ramu

4ம.நே 


எதுவோ ஆதாரம்? தமிழே!

வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்...
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்...
கல்வி முனைமீது காயம் சுழலநீ...
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்! 

உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும்
உமிழ்நீர் ஒழிய உமிழ்!

விண்உள்உ லாவும் பிரிதொரு சொல்வானம்!

மண்உள்உ லாவும் பிரிதொரு சொல்பூமி!

பெண்உள்உ லாவும் பிரிதொரு சொல்மண்கை!

கண்உள்உ லாவும் பிரிதொரு சொல்விழி!

புண்உள்உ லாவும் பிரிதொரு சொல்காயம்!

 

அன்புஉள்உ லாவும் பிரிதொரு சொல்அன்னை;

உன்னை பிறக்குமாறு ஆகிட்ட... தந்தை;கல்

இன்னும் ஆகமவிதி ஏன்?காணல் நீர்...அயலான்

பண்ணுள் கடவுள், படைப்பு எனும்மோதல்;

பின்னும் சாதிகுல பேததெய்வ பதர்கள்

துன்புறா ஓதல்களும்;  சொல்தமிழ் உமிழ்நீர்!




· 
















·

 






சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?
சென்னையைச் சரியாகக் காட்டவில்லை. ஆனால், மோசமாகவும் காட்டவில்லை. மற்றபடி தமிழ் சினிமா சென்னையை, சென்னை மக்களைச் சென்னை மொழியை. இழிவானதாக இழிவானவர்களாகத் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டு வந்திருக்கிறது.

குறிப்பாகச் சென்னை மொழியை மிகக் கேவலமாக அவமானபடுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் பேசுவது போன்று செயற்கையான, சென்னை தமிழைச் சென்னையில் நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.
சென்னை தமிழை இப்படிக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழுக் காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.

சென்னையின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட, வன்னிய, மீனவ மக்களை; பார்ப்பனர்களின் நாடகங்களில் ரவுடிகளாகச் சித்திரித்து, அந்தக் கதாபாத்திரத்தை பார்ப்பனரே ஏற்று, இழிவான உச்சரிப்புகள், செய்கைகள் மூலம் சென்னை மக்களையும் இனிய சென்னை மக்கள் மொழியையும் கொச்சைப்படுத்தினார்கள்.

அதில் சோ போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜாம்பஜார் ஜக்கு போன்ற வேடங்களில் அவர் பேசிய மொழி இந்த உலகத்தி்ல் எங்கேயும் யாராலும் பேசப்படாத மொழி.

நாடகத்தின் தொடர்ச்சியாகச் சினிமாவுக்கு வந்த பார்ப்பனர்கள், சென்னை சேரி மக்களுக்கு எதிரான கருத்தோடும், கதாபாத்திரத் தோடுமே வந்தார்கள். மதுரை மற்றும் கோவை பகுதிகளில் இருந்து சினிமாவிற்கு வந்த இளைஞர்களும்கூட, சென்னை மொழியைக் குறித்துப் பார்ப்பனர்கள் கற்றுத் தந்த கண்ணோட்டத்தோடே படம் எடுத்தார்கள்.

உண்மையில் சென்னை தமிழ் என்பது, சென்னையில் மட்டும் பேசப்படுகிற மொழியல்ல; அது வடஆற்காடு, திருவண்ணாமலை. விழுப்புரம் மாவட்டத்து பேச்சு மொழி. மிக அதிகமாக வட ஆற்காடு மாவட்ட மொழி.

கஸ்மாலம், நாஷ்ட்டா போன்ற சொற்கள் எல்லாம் உருது சொற்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் உருது பேசுகிற இஸ்லாமியர்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட மக்களும், உருது இஸ்லாமியர்களும் நெருங்கி வாழ்கிற பகுதிகளில் உருது வார்த்தைகள் கலந்து பேசுகிற தமிழே சென்னை தமிழாக அறியப்படுகிறது.

சரியாகச் சொன்னால், சென்னை தமிழ் என்பது தாழ்த்தப்பட்டவர் களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான ஒற்றுமையின் அடையாளம்.

அதற்குச் சாட்சியாகச் சென்னை, வேலூர், ஆற்காடு, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பு களின் மத்தியில் இஸ்லாமியர்களின் பச்சை கொடி பறப்பதை பார்க்கலாம். இருவரும் கலந்தே வாழ்கிறார்கள்.

சினிமாவில், சென்னை தமிழை ஓரளவுக் சரியாகப் பயன்படுத்திய ஒரே தமிழ்த் திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28.

சென்னை மக்களின் வாழ்க்கை குறித்துச் சரியான அரசியல் பார்வையோடு திரைப்படம் எடுக்கக் கூடியவர் இன்றைய இயக்குநர்களில் இயக்குநர் எஸ். பி. ஜனநாதனுக்கு இருப்பதாக உணர்கிறேன். அதற்கான அறிகுறிகள் அவரின் ‘ஈ’ படத்தில் இருந்தது.

‘சென்னையில் குறிப்பாக மீனவ மக்களோடு வளர்ந்தவன். சென்னையைக் குறித்துச் சிறப்பான படம் எடுப்பது தனது லட்சியம்’ என்றும் பேராண்மை படம் விமர்சனம் தொடர்பாகப் பேசும்போது இயக்குநர் எஸ் பி ஜனநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.

ரேடியோவில் ஒலிபரப்பான பேட்டி என்று நினைக்கிறேன், ஒருமுறை எழுத்தாளர் சிவசங்கரி “ச்சீ என்ன தமிழ் இதெல்லாம்..? கஸ்மாலம், நாஸ்ட்டா, கயித, குந்து’ என்று அலுத்துக்கொண்டார்.

இப்படிச் சிவசங்கரி மட்டுமல்ல; தாடி வைச்சிக்கிட்டுத் தன்னை எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்கிற திருப்பூர் கண்ணனோ, கோபாலனோ பெயர் நினைவில்லை அவர் உட்பட ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

‘ஸ்நானம், ஜலம், பேஷா, நன்னா, நேக்கு, நோக்கு, உக்காத்தி வைச்சி’ இதெல்லாம் உங்களுக்குத் தமிழா தெரியும்போது, ‘கஸ்மாலம், நாஸ்ட்டா, பேமானி, கயித, குந்து’ இதெல்லாம்தான் எங்களுக்குச் சிறப்பான தமிழ், இதுதான் எங்களின் செம்மொழி தமிழ்.

சமஸ்கிருதம் கலந்து பேசினால், உயர்வான தமிழ், மணிபிரவாள நடை.
உருது கலந்து பேசினால் மட்டமான தமிழ், இழிவான நடையா?
இது வெறுமனே மொழி பிரச்சினையல்ல. ஆயிரம் ஆண்டுகால அரசியலே இதுதான்



Niya Ku 
பின்தொடர்க
இதில் முக்கியமானது ஒன்று விட்டு விட்டீர்கள் சங்கர் சினிமாவிலும் மற்ற பல சினிமாக்களிலும் எப்பொழுதும் வடசென்னை வாசிகளை
ரவுடிகள் கஞ்சா கடத்துபவர் பெண்ணை கற்பழிப்பவரும்
சித்தரித்தே பழகி விட்டார்கள்
எல்லா மொழிக்கும் ஒரு தனித்துவமும் இருக்கு
அதில் சென்னை தமிழ் தான்
பேச இன்பமும் அழகும் 🌹🌹


இன்று அடிமைகளாகியுள்ள மண்ணின் புதல்வர்களும் புதல்வியரும் அந்தப்படிக்கு ஒவ்வொரு சாதியினரும் பாரத துணைக்கண்டத்தை பேரரசர்களாகவும் மன்னர் களாகவும்குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளனர் 

இன்றும்சாதிகளும் சாதி அமைப்புக்களும் ஒழிவுறாத தற்கும் முக்கிய காரணமாக (மறைமுகமாகவும்) உள்ளது என்பதற்கு ஆரியர்களின் (ஆர்எஸ்எஸ் அமைப்பினர்) தொடாகிற குற்றச் செயல்களால் இந்தியா சிதறுரும் நிலைமை வருமானால்... 

கிழக்கு மேற்கு பாகிஸ்தான்கள் தவிர்த்த இந்திய துணைக் கண்டத்தில் ஆங்காங்கே மக்கட்தொகை எண்ணிக்கைகள் 
மற்றும் பொருளாதார வலுவாலும் எந்ததெந்த சாதிகள் எந்தெந்த நிலப்பரப்புக் களில் முதன்மையானவர்களாக இருக்கின்றனரோ அந்தந்த நிலங்கள் எல்லைகட்குள் அந்தந்த சாதிகள் ஆளுமையில்...
இந்தியத் துணைக்கண்டத்தை ஆளும் முயற்சியைமறைமுகமாக செய்தபடி இருக்கின்றன. 

சமீபத்தில் ஆந்திரா தெலுங்கானா மாநிலமாக பிரிந்துற் றதுபோல் எடுத்துக்காட்டுக்கு தமிழகத்தில் கொங்கு மண்டலம் வேண்டு மென்று தமிழகத்தை உடைத்திட ஒருமக்கட் பகுதியினரும் (கவுண்டர்கள்) மூவேந்தர் என்று ஒருங்கிணைந்த பகுதியினரும் (கள்ளர்கள்) மறை முகமாக நடவடிக்கைகளாலும் 

பஞ்சமி நில மீட்புக் குழு என்று தாழ்த்தப்பட்டவர்கள் பாதிப்புக் குள்ளானவர்கள் உரிமைப்பூர்வமாக வெளிப்படை யாகவும் போராடி வருகின்றனர். 

அந்தப்படி தமிழர் ஆளுமையை மேலும் சிதைவுற ஆகும்படிக்கு தமிழ்மொழியை சிதைத்து பல பிரிவுக ளாக்கிட வந்தேரிகளும் (ஆரியர்களும்) முயற்சியை வலிஅறியாமல் ஊசி ஏற்றும் நிலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனா. 

எடுத்துக் காட்டாக இலக்கணம் விலகிய தமிழில் (கொலோக்கிய லாங் வேஜ்-ல் அப்படி தமிழைக் கெடுத்தால்தான் சாமான் யர்கட்கு புரியுமாம்) திரைப்படங்கட்கு கதை வசனம் எழுதிடுவது அவ்வாறு பாடலாசிரியர்களை ஊக்கு விப்பது என்கின்ற நிலைப்பாட்டில்...   

தமிழ் இன்று கோவை தமிழென்றும் மதுரை தமிழென்றும் சென்னைத் தமிழென்றும் ஆதிவாசித் தமிழென் றும் நெல்லைத் தமிழென்றும் அந்தப்படிக்குஇலக் கண தமிழை பெருகுறு கூறுகளாக்கியுள்ளனர். 

அதன்அடிப்படையில் கொங்குத் தமிழர்கள் என் கின்ற புதுப்பெயரிட்டு கொங்கு மண்டலம் வேண்டு மென்றுகொங்குத் தமிழ் பகுதியர் அல்லாதோரை திராவிடகட்சிகள் என்று இழிவுப்பட பேசிடும் நிலவரம் ஆதாரத்தில் கோரிக்கைகளுன் தமிழ் ஆளும் மாநிலத்தை பிளவுப்படுத்திட முற்படுகின்றனர்

மேலும்:

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...