நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல 🔥 | Ethirneechal | Tamil Serial |...
தாய்முகம் தெரியாது தகப்பன்யார் அறியாது!
சேய்ஆகி சிரிக்காது பருவபெண் பாஞ்சாலி
தீய்சோதி உயரஊடே தீயா(து) உதித்தாளாம்!
பேய்பொய் பெரும்பிழை பிறப்பே நய்நொய்;
ஆய அறிவே ஆகமகா பாரதமே வீண்நோய்
காய ஓயா மாயா காணல்நீர் பக்தி பதர்உமி!
மாயன் மகளாகி மா..,மக மாயிஆகி
பேயும் எனஓது வோர்பெய் மழைஆகி
ஓயா துயரங்கள் ஓயநீ தெய்வமென்றால்
சாயா சதிசாதி சாய்!
மண்டியிடும் ஆணவமே! மானம், புனிதம்எது?
பெண்டிர்தம் கற்புநிலை பேணும்உயர் பண்பாடே!
ஆசைகளோ ஆழி; அடக்கிடநீ, போடுவாயோ…
ஓசைகட்கு தாலிவேலி ஓதி!
புல்லே!சொல் உன்பெண்ணும் போரா டிடஇன்றும்
தில்லுமுள்ளாய் மாடுகட்ட தேடும் கயிறுஅன்ன;
எல்லைஅன்புள் தாலி இறுதிஎன்பான்பெண்ணடிமை
கொள்கை புனிதம்அல்ல கொள்ளை!
வினாயகனோ, அய்யப்பனோ, கந்தனோ, கர்ணனோ, அவர்தம்
அன்னையர் தாலி கட்டிட்ட நேர்வில் பிறந்தனரோ? [அந்தப்படிக்கு]
தாலி கட்டாமல் கடவுள்களே தோன்றியிருக்க, தெய்வங்கள்யாவும்;
தாலி புனிதத்தில் பிறந்தாற்போல் ஓதிடுதே ஊழல்வம்சம்?
ஆசைகள் ஓர்ஆழி! ஆழிக்கு ஓர்வேலி! வேலியாய் ஓர்தாலி!
ஓதுவோனே! பண்புப் பரப்புக்குள் சந்தேக வேலி எதற்கு?
எங்கே திரிசூழி வரவழை; உயிரோடு இருக்க
பார்வதி எரியுண்டா ளாமே! சிவன்அணிவித்த தாலி புனிதமற்றதோ?
எந்தவோர் நாமமிட்ட மனிதனுக்கோ, ஆண்டவனுக்கோ,
வினாயகன் கருவாக பொணொருத்தி பிரசவிக்க வில்லை!
எந்தவோர்வி பூதி கடவுளச்சிக்கும் முருகன் பிறந்திடவில்லை!
இதில் யார் அணிந்திட்ட தாலி எந்தத் தேதியில் தகுதி புனிதமுற்றது?
ஓதுதல்வழி சுரண்டல் செய்திடும் சாதிவேத சூதுக் கூலி தொழிலாளியே!
பாஞ்சாலிக் குஎவன் கட்டினான் பண்பாடுக் காத்து!தாலி...சொல்?
எப்போது கட்டினான்? சாதக சோதிடம் கால நேரம் பார்த்துத்தானே…
கழுத்தில் மாட்டிக்கொண்டாள் பாஞ்சாலி தாலி; என்றாலும்...
தாலி காப்பாற் றிடவில்லை பாஞ்சாலி யைதுரி யோதனன்முன்?
அவள்சேலை யைப்பற்றி அவிழ்த்திட்டானாமே துச்சாதனன்!
கதைஉள்ளதே; தாலிபுனிதம் என்ன ஆயிற்றாம்? வந்தானாமே கண்ணன்!
வந்தும் அவிழஅவிழ பாஞ்சாலி சேலை வளர்ந்திட்ட தாமே! அந்த கண்ணனை...
![]() | @RajiKanmani | |
தலையணை மந்திரம் பார்த்திருப்பே.... சமையல் மந்திரம் பார்த்திருப்பே எட்டெழுத்து மந்திரம் பார்க்கிறியா பார்க்கிறியா.... தன்மானத்தமிழன் சீமான் கூறியதுதான் நியாபகம் வருது..... "இவனையெல்லாம் ஈவ்டீசிங்ல உள்ளே புடிச்சு போடனும்க....."#எட்டெழுத்து மந்திரம் #கிருஷ்ணன் லீலை #நித்தியானந்தாpic.twitter.com/1iRVUOUm8E |
கன்னியர் குளிக்கையில் தாவணிகளை கவர்ந்திட்ட வெண்ணெய் திருடனை
பெண்களின் அன்னையர் தாலிப் புனிதம் தண்டிக்க இல்லை யேஏன்?
கண்ணனின் லீலை ஊழலை போற்றி ஓது வோர்துதித் திட்டனராமே!
அந்தக் கோபியர் அன்னையருள் ஒருவரும் தாலிகட்டி புணர்ந்து தம்பெண்களை
பிரசவிக்க வில்லையோ? ஆக தாலிதான் பெண்களின் கற்புநெறிகட்கு வேலியோ?
மீளும்கூத் தாண்டவ! எனபொய் மந்திரம் ஓத!
ஆளும்ஆரிய கொசுக்களை; தெய்வம் வருமோ?
கேளும்... பன்றிஅவ தாரம் எடுத்திடு மோ?அந்
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதம் வீழுமே!
எப்போது மாறிடுவாளோ? எவனோடு ஓடிடுவாளோ?
தப்பவிட்டால் சாதிகள் சாகுமே! சுரண்டல் பேதங்கள் நிலைக்காதே!
அவசர காமதேனு; விடாதே அவள்கழுத்தி லும்மாடாக கட்டுதாம்பு என்று
தவறாக கயிறொன்றை கயவன்ஓதித் தந்திந்திட்டால் தாலி புனிதம் ஆமோ?
அடே பேத வம்சப் பாவி! சிவப்பு விளக்கு பகுதிகளில்
பிழைவாழ்க் கைதவறு கட்குத் தாலிகள் தான்வேலி!
திருமண வேலியிட கூலிநீ பிதற்றும் போலி
சீர் சிறப்பு சரி யில்லையேல் அறுந்தி டுதுஏன்
சிலரது தாலி தாலி அணிந்த பின்னும்சமூகங்
களிடையே கற்பழிப்பு அவ்வப் போதுசெய்தி
சிவக்கொழுந்தே! அனந்த கிருஸ்ணா! வெங்கட்ராமா!
சிவப்பு விளக்குக ளடியில் இந்துத்துவாப் பெண்கள்!
குடும்ப மகளிராய் மாறட்டும குடுமிபூநூல் சாதிஅவிழ்;
தடுமாறாதே திருமணம் செய்திடு தாலிகள் புனித மாககூடும்!
உயிரை மதியா உமிபதர்நெல் சாதி
மயிரை நெருடும் சனாதனம் தாலி
கயிறை விலகி கடமைசெய்; வாய்மை
பயிரை பராமரிநீ... *அய்யன்!
*அய்யன் - ஒழுக்கம் உடையவன்.
பொய்யனுக்கு எதிர்பதம்... அய்யன்!
காதலா!நீ தாலி அவசியமா? எனவினவும் முற்போக்குச் சுதந்திர சிட்டு!
ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு
மோதிரம் அணியமண ஓசைக்காக பகலிலும்
தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகுமோ!?
பாற்கடல்மேல் பரந்தாமன்கதை அன்ன... காதல்
பாம்பு படகாய் மாறநீ படுக்க… நான்
படகோட்டி மகளாக, படகோட்டிட ;
உனக்காக, உன்முகம்நோக்க…
[இது கனவில்…]
விடிவெள்ளி முளக்க – என்
மடிமீது நீ விழிமூடி அதிகாலை
மயங்க நான் முயங்க…
காலை உணவை என்வாயில்
நீ ஊட்ட சொட்டும் உன்
உமிழநீரை
நான் தேனாக துடைக்க
அலுவலகம் புறப்படும்நேரம்
இருசக்கர ஊர்தியில் உன்பின் நான்
பின்இருக்கையில் அமர…
என்இடதுகரம் உன்இடுப்பை பற்ற
வலது கரம் உன் தொடையை வருட…
அலுவலகத்தில் வருகையை உறுதிசெய்து
கையொப்பமிட்டுப் பிரிகையில்
என்னைநீ ஒருமாதிரி பார்க்க
பிரிவுஏக்கம் என்னையும் தாக்க
ஓர் அரை மணிநேரம் பிரிவு தாளாமல்
என் இருக்கைக்கு நீ வந்து
தேனீர் அருந்த அழைக்க…
காலை உணவு உண்ட
நிகழ்வுகள் மதியவேளையிலும்
மாறாமல்அன்புப் பரி
மாறல்கள் நிகழ
பார்த்தோரில் பலர் இக்காட்சியை ரசிக்க
ஒரு சிலர் தூ பட்டப் பகலில்
வெட்கங் கெட்ட பிறவிகள்
என்று நம்மைத் தூற்ற
அலுவல் நேரம் மாலை வர
முற்றுப்பெற
கடற்கரை சாலைவழி
இருவரும் கைகோர்த்து நடக்க
போகிறவனும் வருகிறவனும்
திரும்பித் திரும்பி
நம்மைப் பார்த்து கிளுகிளுக்க…
இப்படி எல்லாம் நடந்துற என்று
ஆசைகள்என் மனதுள்
எப்போதும் உலாவ
ஒவ்வொரு நாளும் என் காதலா…
என் காதலா
என்எண்ணங்களுள் துளாவ
இப்படி ஓர் ஏக்கம் பல ஆண்டுகளாக
என் இதயத்தை துளைக்க
ஆசைகளெல்லாம்
நிறைவேறாமல் மடிந்துற்றனவே!
மத பேதங்கள் நம் இருவரையும்
பிரித்திட்டனவே!
கடவுள் இருந்தால் நமக்குள்
இப்படி ஓர் பிரிவுத் துயரம்
நிகழ விடுவானோ?
Click &view: https://www.facebook.com/share/1L3sgCT4jv/
Comments
Post a Comment