தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

வினாமேல் வினாஎய் விடை?பதரே! ஓதும்

சனாதனஆன் மீகஊழல் சாதிசூதுக் குற்றம்

எனான்...மத பெய்யன் இறைநம் பிக்கை

கனாஅன்ன கற்பனை காணல்நீர் நேர்மை

குணமிலாவந் தேறி-கள்வர் கொள்கை.


பேத எருக்கே! பெருச்சாலி ஓதுகிற

சாதி கிறுக்கே! சமய புழுநெழியும்

வாத செருக்கே! மடமை அகங்கார(ம்)

கீதை அறிவியல் கேடே! பெரியாரின்

பாதைமகா பாரதம் அல்ல.                                                      

மகாபா ரதம்இரா மாயணபொய் நூலால்

தகாமதஆ திக்க அடிமைசாதி ஆக...                          

அதேநிலை இந்திவழி ஆளுமைதி ணிப்பு;

நிதானம்; யோசி நிமிராது ஏற்றால்....

திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்;

வராதேஅந் நோய்சூழல் மாய்! 


Jegatheeswaran Peetirajan

கோவில் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்
Image 3 பேர் மற்றும் , ’"ஜீயர் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது" ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாத அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது ருவறைக்கு முன்பிருக்கும் அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜ வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகி விளக்கம் இதுவரை தன்னை சங்கீத சக்கரவர்த்தி யாகவும் இசைக்கே ராஜாவாகவும் ஒன்றிய அரசவையில் எம். នា யாகவும் எண்ணி பெருமைபட்டு கொண்டு இருந்த இளையராஜா அந்த மதவாதிகளின் பார்வையில் தான் ஒரு சூத்திரன் மட்டுமே என்பதை உணர்கிறார்’ எனச்சொல்லும் வாசகம் படமாக இருக்கக்கூடும்

அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...       

நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்!

பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி...

விழிவழிவன் ஆணவம் விலக்கி மதத்துள் ஓதும்

இழிவுகளை நீக்கு; நேர்மை இந்தியா தென்படும்!


தமிழ்நம் திராவிட(ம்) தாய்;உறவால் ஒன்ற

அமிழ்தச கோதரம்; ஆயினும்வந் தேறி 

பிரிவினை வாதசூதால் பிய்ந்தோம்; சிதைந்தோம்!

திராவிடமாய் மெய்சுதந்தி ரம்காண்!


எங்கு பார்த்தாலும் திராவிடமா? கொதிக்கும் ஆளுநர்!

https://way2.co/MTQ1OTM3NzY=/95_lng2

படித்ததில் பிடித்தது ~ (comments-133)

திராவிடத்தின் நான்கு  பிள்ளைகளில்  ஒரு  பிள்ளைதான்  தமிழ்நாடு  மற்ற  பிள்ளைகள்  திராவிடத்தை  மறந்தாலும்  தமிழ்நாடு  திராவிடத்தை  மறக்க வில்லை.  திராவிடம்  தான்  தமிழ்நாடு . தமிழ்நாடு  தான்  திராவிடம்.  உன்னைப்போன்ற  சங்கிகளுக்குத் தான்  இது  வித்தியாசமாகத்  தெரியும்  எங்களுக்கு  இரண்டும்  ஒன்று தான்

--  Jani batcha 1953 (Pudukkottai).

சாதியாவ தேதடா? சலம்திரண்ட நீரெலாம்;

பூதவாசல் ஒன்றலோ? பூதம்அய்ந்தும் ஒன்றலோ?

காதில்வாளி காரைகம்பி பாடகம் ஒன்றலோ?

சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையே!

-- இது பாட்டன் சிவவாக்கியர் ஞானம்.


கடல்உள் கழிவுநீர் கலப்பதால், கடல் வளம்;

மாசுபடு கின்றது!

காதல்முகத் துவாரரங்களுள் மதநச் சரவுபுக;

மானுடம் கெடுகின்றது!

உடலுள் சாதி* உதிரம்எது? நீர்இலா பூமியாய்;

உணர்வு வெடிக்கின்றது!

தடைஉடை! இந்து ஒட்டைஅடை; பேதம்அறு...

பாரதத்தில் வாழும் சனநாயகம்! 

 *சொட்டும்


இழிவாய் சூத்ரதொற்(று) இந்துமதம் சாதி

பொழிவாய்; சனாதனநோய் போற்றும்ஆன் மீக

கழிவாய் ஆக... கடவுள்சார் போலி

நெழிவாய் மதம்தொழல்ஏன்? நீக்கு.


 காதலால்இ சைந்ததும் காமத்தால் கலந்ததும்

தாதடாபு குந்ததும் தானடா பிறந்ததும்

ஏதடா சாதியும்? எதற்கடா கடவுளும்?

ஓதடாஉன் கற்பனைக்கு உயிருணர்வு இல்லையே!

 

ஊழல்? அரசியல் உள்சொல்-பா... யாசமாய்

பாலும் மதமே! பகுத்துஒழி பாசிச(ம்)

தோளுள்-பூ... நூலுள் துயர்சொரியும் சாதியான்

ஆள-லுள்தான் ஆன்மீக(ம்) கேடே!


மணம்பரப்பி ஆடும் வனம்ஆகா; செழித்த

இனவேலம் முள்எருக்கன் கள்ளிசப் பாத்தி

அரளிஒடு வன்கே(டு) அகற்றுஅப் போது

தரம்ஆம் மதம்சாரா கொள்கை!

 

மரம்ஏதும் இல்லா வனம்பாலை ஆம்அதுப்போல்

இறைஎனும் பொய்யால் எதுமதம்? நம்புக்

கருவேலம் முள்எருக்கன் கள்ளிசப் பாத்தி 

அரளிஒடு வன்நஞ்சுக் காடே!

 

சாதியிலா நாடு சமத்துவம்மொய் தேன்கூடு;

பேதபொய் ஆன்மீக(ம்) பேய்வாழ் சுடுகாடே!

ஓது சனாதனம் ஊழல்சீழ் நாமஓடு

வாதம்ஏன்? தேசம்எம்சு வாசம்

தேனை அருந்து கின்றாய் மாமருந் தென்று!
வானைமுட்டும் அறிவியல் கண்டும் உழைக்கும்;
தேன்ஈக் கட்கு தீயிடல் சரியோ? பசும்பாலை...

பருகல் மட்டும் என்றன்று  நெய்யை யாகம்என;
நெருப்புள் கருக்கு கின்றாய்! கன்றின் ஊட்டம்;
திருடலும் உரிமை பொசுக்கலும் நேர்மையோ?

தோலை உரிக்கவிட்டு பசுவை செருப்புகளாக்கி;
கால்களை நுழைதுச் சென்று அரசமரம் சுற்றல்;
அதுமாடு வதைஅல்ல  வோ?விளை யாடும்எம்...

காளையரை இழிவு செய்தாய் இதுதான்எமை...
சூழும்உன் விதியோ? சாதி சாணமே! எருக்கன்;
பாலுள் வெண்மை ஆகிட்டநீ தமிழன் உணர்வை;
நாளும் அவமதிக் கின்றாய்ஏன்? காரணம்மொழி!


Click &View:


Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...